Friday, September 27, 2013

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே நம்மின பகைவர் எங்கோ மறைந்தார்

நம் தமிழால் என்று ஒன்றுபடுவோமோ, அன்றே நமது விடுதலை மொட்டு மலரத்தொடங்கும். ஒரு மலையாள கிறித்துவர், ஒரு மலையாள இஸ்லாமியர், மலையாள இந்து போன்ற மதவாதிகளும்,ஒரு மலையாள மார்க்ஸிஸ்ட்,காங்கிரஸ்,பி ஜே பி. போன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும்,தங்களை முதலில் மலையாளிகள் என்ற மொழி,இன அடயாளமாகவே கொள்கிறார்கள்.

 
தமிழியம் மட்டுமே அறம் சார்ந்த, உயிர்நேயமிக்கப் பொதுமைத் தத்துவங்களை உள்ளடக்கியது.பெரும்பாலும் மதங்களும்,மேல்நாட்டுத் தத்துவங்களும்,மார்க்சீய சித்தாந்தம் உட்பட அனைத்துமே மனித நேயத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.அவர்களின் பார்வை இந்த உலகம் மனிதனுக்குமட்டுமே சொந்தம் என்று கருதுவதால் தான்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

No comments:

Post a Comment