Monday, September 30, 2013

வெல்வோம் நாமென வீறு கொண்டெழுந்தால் வீண் காலம் போகாது வீணர்கள் எம்மை வீழ்த்த நினைப்பினும் விடுதலை தோற்காது



உரலில் இடித்ததை
வழித்து எடுப்பினும்
துகள்கள் அழியாது
கோரை புற்களை
வெட்டி வீழ்த்தினும்
வேர்கள் அழியாது

விடியலை தேடி
வீழ்ந்த வீரரின்
புகழ் என்றும் அழியாது
தமிழ் புலிப்படை வீரம்
தரணியில் என்றும்
தரம் தாழ்ந்து போகாது

மனச்சோர்வு கொண்டால்
எம் இனம் என்றும்
வாழவே முடியாது
மாண்ட மறவரின்
கொள்கையை
மனதிலே கொண்டால்
மனமே தளராது

வெல்வோம் நாமென
வீறு கொண்டெழுந்தால்
வீண் காலம் போகாது
வீணர்கள் எம்மை
வீழ்த்த நினைப்பினும்
விடுதலை தோற்காது
..பா .சங்கிலியன் ...

No comments:

Post a Comment